search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collaboration"

    • கேபிள் டி.வி. செயலிழப்பு விரைவில் சரி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சீரமைக்கும் வரை வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்ப குழுவினர் மூலம் 50 சதவீதம் செட் அப் பாக்ஸ்கள் சரி செய்யப்பட்டுள்ளன. ஆப ரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு அம்முறையிலும் இந்த சிக்கலுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

    தற்போது மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்வதற்கான பணிகள் நடக்கிறது. சீரமைக்கும் வரை வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பக்ரீத் பண்டிகையை சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
    • இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை வடக்கு தெரு ஜமாத் நிர்வாக சபை தலைவர் ரெத்தின முஹம்மது, உதவி தலைவர் அப்துல் ஹமீத் செல்லவாப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கீழக்கரையில் ஆண்டுதோறும் வடக்கு தெருவில் உள்ள மணல்மேட்டில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் சமூக நல்லிணக்க திருவிழாவாக நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பள்ளி, கல்லூரியில் படித்த அனைத்து சமுதாய மாணவிகளும், சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் கல்லூரி தோழிகளை சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து, நலம் விசாரித்து வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மணல்மேடு பண்டிகை கால கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக நடத்த ஜமாத் நிர்வாக சபை முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மாலை 4மணி முதல் 10.30 வரை பக்ரீத் பண்டிகை விழா நடைபெறும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தவும் முறையான அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர கூடுதலாக மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் கடைகளும் ஏற்படுத்தப்படும். திடல் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தபடி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×