என் மலர்
நீங்கள் தேடியது "Coimbatore Hawala money"
கோவை:
கோவையில் இருந்து நேற்று தனியார் பஸ் கொச்சி சாலையில் சென்றது. அப்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையார் சோதனை சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கோவையில் இருந்து வந்த பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படி வாலிபர் இருந்தார். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்சென்னையை சேர்ந்த அப்துல்காதர் (வயது 40) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் ஹவாலா பணம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்துல்காதரிடம் நடத்திய விசாரணையில் இதுவரை பல கோடி ஹவாலா பணத்தை சென்னனையில் இருந்து கொச்சிக்கு கடத்தியது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோன்று வாளையார் அடுத்த குருடிக்காடு அருகே வாகன சோதனை நடத்தியதில் பெங்களூருவில் இருந்து திருச்சூர் வந்த பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் நடத்திய சோதனையில் திருச்சூரை சேர்ந்த ஜேம்ஸ் ஜாய் (43) என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் ஹவாலா பணம் மற்றும் 7 கிராம் தங்க நகைகளையும் பறிமுதல் செய்யப்பட்டன. ஜேம்ஸ் ஜாய்யும் போலீசார் கைது செய்தனர். #Hawalamoneyseized
கொழிஞ்சாம்பாறை:
கோவையில் இருந்து கேரளாவுக்கு நேற்று அரசு பஸ் புறப்பட்டது. பஸ் பாலக்காடு மாவட்டம் வாளையார் அட்டப்பள்ளம் சென்றது.
அப்போது பாலக்காடு இன்ஸ்பெக்டர் ராகேஷ் தலைமையில் வருமானவரித்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் இருந்து வந்த பஸ்சையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
பஸ்சில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் மற்றும் கோட்டில் கத்தை கத்தையாக ரூ.50 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.
பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் ஜோலாப்பூரை சேர்ந்த பப்பு ராவுத்தூர் (வயது 35) என்பதும் உரிய ஆவணங்கள் இல்லாத ஹவாலா பணத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அவர் கூறும்போது, பொன்னானியை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க இந்த ஹவாலா பணம் கடத்தி சென்றதாக கூறினார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் விசாரணை நடத்தி வருகிறார். #HawalaMoney
கோவை:
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு துறை பறக்கும் படை இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் அதிகாரிகள் கோவை வாளையார் சோதனைசாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கோவையில் இருந்து வேகமாக வந்த ஒரு வேனை சைகை காட்டி நிறுத்த முயன்றனர். ஆனால் வேன் நிற்காமல் வேகமாக சென்றது. இதையடுத்து மதுவிலக்கு துறை பறக்கும் படையினர் அந்த வேனை விரட்டி சென்றனர். அப்போது கூட்டுபாதை என்ற இடத்தில் போலீசார் அந்த வேனை மடக்கினர்.
பின்னர் வேனில் இருந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசினார். விசாரணையில் அவர் எர்ணாகுளத்தை சேர்ந்த சுக்கூர் என்பது தெரியவந்தது. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது டிரைவர் சீட்டுக்கு அடியில் ஒரு ரகசிய அறை அமைத்து அதில் கட்டுக்கட்டாக புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் ரூ.24 லட்சம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சுக்கூரிடம் கேட்டபோது கோவையில் இருந்து பெரும்பாவூருக்கு பணத்தை கடத்தி செல்வதாக தெரிவித்தார். மேலும் இது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுக்கூர் கைது செய்யப்பட்டு பணம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது. #HawalaMoney






