என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coconut Fiber factory"
- முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா முதலிபாளையம் கிராமத்தில் இருந்து புளியம்பட்டி வழி செல்லும் சாலையில் தனியார் தென்னை நார் சாய தொழிற்சாலை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை நிறுவினால் கிராம மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், நிலம், நிலத்தடி நீர் மற்றும் கால்நடை என அனைத்திற்கும் பாதிப்பு உண்டாகும். மேலும் வேளாண்மை செய்யும் நிலங்கள் மிகவும் மோசமடையும்.
இப்பகுதியில் ஊராட்சி மன்றத்திடம் கட்டிட அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை தொடர்ந்து வரும் இந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் நிலத்தடி நீருக்கும் சுற்றுச்சூழலுக்கும் உயிர்வேளிகளுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.
இந்த கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பெருமாள்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வருகிற 13-ந் தேதி காலை 10 மணி அளவில் ஊதியூர் பஸ் நிறுத்தத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாயிகள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினரும், மற்ற அமைப்பினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த பிரச்சினை ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் பேசப்பட்டு ஒருமனதாக தொழிற்சாலை அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் பச்சாபாளையம் பகுதியிலும் தார் தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை தடுக்க வேண்டும் என பச்சாம்பாளையம் பகுதி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊராட்சி அனுமதியின்றி நிறுவப்படும் தொழிற்சாலைகளை நிறுத்த வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்