search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizen Band"

    • இலவச வீடு கட்டும் நிதியை ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
    • 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாய தொழிலாளர் சங்க பேராவூரணி ஒன்றிய செயலாளர் மு.சித்திரவேலு தலைமை வகித்தார்.

    சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் துரை. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    விதொச மாநில குழு உறுப்பினர் வ.ராஜமாணிக்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 3 மாத கால சம்பள பாக்கியை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும். பேராவூரணி பகுதியில் குடிமனை பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்க ளுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும்.

    பெருமகளூர் ஆர்கே நகரில் வசித்து வரும் ஏழை, எளிய குடிசை வாசிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்தி ரூபாய் 600 தின சம்பளம் வழங்க வேண்டும். அனைவருக்கும் வேலை அட்டை வழங்க வேண்டும்.

    இலவச வீடு கட்டும் நிதியை ரூபாய் 5 லட்சமாக வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை பேராவூரணி நகர் பகுதிக்கு விரிவுபடுத்த வேண்டும்.

    விவசாய தொழிலாளர் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருமண உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை மூன்றாண்டு காலமாக வழங்காமல் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் பேராவூரணி, சேதுபாவா சத்திரம் விதொச நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×