search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ChristianMichel"

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர். துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில்  துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார். விசாரணைக் காவல் முடிவடைந்தபின்னர், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல் அமலாக்கத்துறையும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளில் ஜாமீன் கோரி கிறிஸ்டியன் மைக்கேல் இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், கடந்த டிசம்பர் 22ம் தேதி முதல் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், விசாரணை முடிந்து 60 நாட்கள் ஆன நிலையில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் அவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததன் காரணம் குறித்து 12ம் தேதிக்குள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்கும்படி சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையையும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #ChristianMichel #AgustaWestlandscam #VVIPchopperscam #CBI   

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகரை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் அவரை காணவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel
    துபாய் :

    காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ஜனாதிபதி, பிரதமர் போன்ற மிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.423 கோடி லஞ்சம் கொடுத்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தை கடந்த 2014–ம் ஆண்டில் இந்திய அரசு ரத்து செய்தது.

    இந்த விவகாரத்தில் 3 இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றது தெரிய வந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்பவர் மட்டும் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் உதவியை நாடின. பின்னர் அவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து, விசாரணைக்காக கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை தங்களிடம் ஒப்படைக்குமாறு துபாய் அரசை இந்தியா கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அங்குள்ள கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த துபாய் கோர்ட்டு கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்சை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கிறிஸ்டியன் மைக்கேலை காணவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் அமல் அல்சுபய் கூறியுள்ளார் என என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

    அவரை கண்டுபிடித்தால் போலீஸ் கைது செய்யும், அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம், அக்டோபர் 2-ம் தேதி வரையில் அவகாசம் உள்ளது என அவர் கூறியுள்ளார். #AgustaWestland #AgustaWestlandScam #ChristianMichel
    ×