என் மலர்
நீங்கள் தேடியது "Chitrai beetle"
- வெடித்து சிதறும் வண்டிலிருந்தே கத்தி கொண்டே மறுபடி வண்டு பிறக்கும், அதுவும் சத்தமிட்டுக்கொண்டே வெடித்து உயிரிழக்கும்.
- வண்டு ஜூன் மாதம் 15 வரை மலைப்பகுதியில் கத்தி கொண்டே இருக்கும்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர் பன்றிமலை, பெரியூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் பயணம் செய்யும் போது மலைச்சாரல் போல் பரவலாக விழுகின்றது.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டால் வண்டுகள் எச்சில் என தெரிவிக்கி ன்றனர். சித்திரை மாதத்தில் விடாமல் கத்துவதால் சித்திரை வண்டு என்று அழைக்கப்படு கிறது. இந்த வண்டுகள் சத்தமிட்டு கொண்டே வெடித்து சிதறும். பின்னர் வெடித்து சிதறும் வண்டிலிருந்தே கத்தி கொண்டே மறுபடி வண்டு பிறக்கும், அதுவும் சத்தமிட்டுக்கொண்டே வெடித்து உயிரிழக்கும்.
இது சிதறும் போது வெளியேறும் திரவம் மழைத்துளி போல் இருக்கும். இந்த வண்டு ஜூன் மாதம் 15 வரை மலைப்பகுதியில் கத்தி கொண்டே இருக்கும். இது ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.






