என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child death குழந்தை சாவு"

    • தங்கமணி பாலூட்டிய போது, குழந்தைக்கு புரை ஏறியதாக தெரிகிறது.
    • இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

    சேலம்:

    சேலம் கொண்டலா ம்பட்டி கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி தங்கமணி (வயது 20). இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலை நேற்று தங்கமணி பாலூட்டிய போது, குழந்தைக்கு புரை ஏறியதாக தெரிகிறது. இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து உடனடியாக பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து கொண்டலா ம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித்குமார், பாரதி தம்பதியினர் ஊர் ஊராக சென்று தங்கி கைரேகை பார்த்து வரும் தொழில் செய்து வருகின்றனர்.
    • இவர்களுடைய 1 1/2 வயது குழந்தை மித்ரன் நேற்று கோவில் பகுதியில் விளையாடிகொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டதாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    கொளத்தூர் அருகிலுள்ள பண்ணவாடி, ராமகிருஷ்ணா காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார், பாரதி தம்பதியினர் ஊர் ஊராக சென்று தங்கி கைரேகை பார்த்து வரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தாரமங்கலம் அருகிலுள்ள பெரியாம்பட்டி மாரியம்மன் கோவிலில் தங்கி அந்த பகுதியில் கைரேகை பார்த்து வந்துள்ளனர்.

    இவர்களுடைய 1 1/2 வயது குழந்தை மித்ரன் நேற்று கோவில் பகுதியில் விளையாடிகொண்டிருந்த போது பாம்பு கடித்து

    விட்டதாக தெரிகிறது. மயக்கம் அடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×