என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே 15 நாள் குழந்தை சாவு
- தங்கமணி பாலூட்டிய போது, குழந்தைக்கு புரை ஏறியதாக தெரிகிறது.
- இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
சேலம்:
சேலம் கொண்டலா ம்பட்டி கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி தங்கமணி (வயது 20). இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலை நேற்று தங்கமணி பாலூட்டிய போது, குழந்தைக்கு புரை ஏறியதாக தெரிகிறது. இதில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து உடனடியாக பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்கள், முதலுதவி சிகிச்சை அளித்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, வரும் வழிலேயே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து கொண்டலா ம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






