search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Justice Indira Banerjee"

    உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். #IndiraBanerjee #MadrasHighCourt
    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளை பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரிவுபசார விழா நடைபெற்றது. விழாவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘உயர்நீதிமன்றத்தில் நடக்கும் பணிகளுக்கு நிதி ஒதுக்குவதை நிறுத்த வேண்டாம் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நிதி ஒதுக்குவது நிறுத்தப்படாது என முதல்வர் நம்பிக்கையுடன் உறுதியளித்தார். யாரிடமும் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்காத நான், இதற்காக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன்” என்றார்.



    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை  சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

    கடந்த 2002-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திரா பானர்ஜி, பின்னர் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndiraBanerjee #MadrasHighCourt
    தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
    சென்னை:

    சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சிவில் நீதிபதிகள் பதவிக்கான தேர்வை வருகிற 9-ந்தேதி நடத்துகிறது. இந்த தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை சைதை துரைசாமியின் மனிதநேய மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், பெண் வக்கீல்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தியது. இந்த பயிற்சி வகுப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

    இந்த பயிற்சி நிறைவு விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நான் 16 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி பதவி வகிக்கிறேன். நான் சிறந்த தீர்ப்பு வழங்கினேன் என்றால் அது என்னுடைய தீர்ப்பு என்று மட்டும் சொல்லமுடியாது. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களின் திறமையான வாதமும் காரணம் என்று கூறவேண்டும். வக்கீல்கள் பல தரப்பட்ட தீர்ப்புகளின் விவரங்களையும், சட்டங்களை எடுத்துரைத்து சிறப்பாக வாதம் செய்தால்தான் சிறப்பான தீர்ப்பை ஒரு நீதிபதியால் பிறப்பிக்க முடியும்.

    நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளின் மூலமாக பேசவேண்டும். தீர்ப்புகள் தான் நீதிபதிகளை எடைபோடும். நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளை பார்க்கும்போது, நீதி வழங்கப்பட்டுள்ளது என்பது முழுமையாக தெரியவேண்டும். நீதிபதியாக அமர்ந்துவிட்டாலே யாருக்கும் ஆதரவாகவோ, சாதகமாகவோ செயல்படக்கூடாது. ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வரும் விமர்சனங்களை தாங்கக்கூடிய மனநிலையில் நீதிபதிகள் இருக்கவேண்டும். விமர்சனங்களை தாங்கக்கூடிய பாறைகளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு, சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் நிர்வாக அறங்காவலர் வெற்றி துரைசாமி நினைவு பரிசு வழங்கினார்.

    இயக்குனர் எம்.கார்த்திகேயன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
    ×