search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Rowdy Murdered"

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் ரவுடி ஆனந்தன் பலியான சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் இன்று விசாரணை நடத்தினார்.
    சென்னை:

    சென்னை ராயப்பேட்டை பி.எம். தர்கா சாலையில் மதுபோதையில் சாலையில் அமர்ந்து சிலர் ரகளை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ்காரர் ராஜவேல் சம்பவ இடத்துக்கு சென்றார். அவரை அந்த ரவுடி கும்பல் வெட்டியதுடன் அவரது வாக்கி டாக்கியையும் பறித்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு ரவுடிகளின் தாக்குதல் சம்பவம் நடந்தது. இதையடுத்து நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரவுடி கும்பலை பிடிக்க வேட்டையில் ஈடுபட்டனர்.

    விடிய விடிய நடத்திய அதிரடி வேட்டையில் போலீசாரை கத்தியால் குத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை 8 மணியளவில் அவர்களை கைது செய்த போலீசார் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ரவுடி ஆனந்தன் (23), அருண், ஸ்ரீதர், சுந்தர் ஆகியோரை தனிப்படை போலீசார் வியூகம் வகுத்தனர்.

    அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சோழிங்கநல்லூர் பகுதியில் 4 ரவுடிகளும் இருப்பதாக மாலை 4 மணிக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ரவுடிகளை சுற்றி வளைத்து மாலை 6 மணிக்கு கைது செய்தனர்.

    போலீசார் ரவுடி ஆனந்தனிடம் விசாரணை நடத்தியதில் வாக்கிடாக்கியை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பதுக்கி வைத்திருப்பதாக மாலை 7 மணிக்கு தகவல் தெரிவித்தான்.

    இதையடுத்து மற்ற ரவுடிகளை ராயப்பேட்டை போலீஸ்நிலையத்துக்கு அனுப்பி விட்டு ஆனந்தனை மட்டும் வாக்கி டாக்கியை மீட்க இரவு 8 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

    அங்கு ஒரு புதரில் மறைத்து வைத்திருந்த வாக்கிடாக்கியை எடுத்து கொடுத்த ஆனந்தன் திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவை வெட்டினார்.

    இதைப்பார்த்த உதவி கமி‌ஷனர் சுதர்சன் மற்றும் இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு ஆகியோர் ரவுடி ஆனந்தனை எச்சரித்தனர். ஆனால் ஆனந்தன் சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து வெட்டியதால் உதவி கமி‌ஷனர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஆனந்தனை நோக்கி சுட்டுள்ளார்.

    இரவு 8 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஆனந்தனின் இடதுபக்க மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் ஆனந்தன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். பலத்த காயம் அடைந்த ஆனந்தனையும், இளையராஜாவையும் மீட்டு இரவு 8.20 மணிக்கு தரமணியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆனந்தனை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இரவு 9.30 மணியளவில் அரசு ஆஸ்பத்திரியில் ரவுடி ஆனந்தன் இறந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

    போலீசாருக்கும் ரவுடி கும்பலுக்கும் இடையே நடந்த தாக்குதல் சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் இருந்தது. இந்த தாக்குதலில் போலீசாரும் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொது இடத்தில் மது அருந்தி மக்களுக்கு இடையூறு செய்த ரவுடி கும்பலை சென்னை போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.



    இதற்கிடையே போலீஸ் துப்பாக்கி சூட்டில் ரவுடி ஆனந்தன் பலியான சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் இன்று விசாரணை நடத்தினார்.

    ஆனந்தன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.
    ×