என் மலர்
நீங்கள் தேடியது "Character theft"
- வாலிபர் கைது
- பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த, கெங்காபுரம், கிராமத்தை சேர்ந்தவர் தயாளன். இவர் தனது வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீடு புகுந்து பித்தளை பாத்திரங்களை திருடிக்கொண்டு ஓடினார். இதை பார்த்த தயாளன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட் டிச்சென்று பிடித்து சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஆரணியை சேர்ந்த மனோஜ் (வயது 20) என்பது தெரிய வந் தது. அவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ஸ்கூட்டர், பாத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






