search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CEOA School"

    • மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள் பொறியியல் கட்-ஆப் மார்க் பெற்று சாதனைபடைத்தனர்.
    • அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், முதல்வர்கள் கலா, கோமுலதா ஆகியோர் பாராட்டினர்.

    மதுரை

    பிளஸ்-2 பொதுத் தேர்வில் மதுரை சி.இ.ஓ.ஏ. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

    இந்த பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாநில அளவில் கருத்து நிலவிய நிலை யிலும், மாணவி சிவரஞ்சனி, மாணவர் சஞ்சய் ஆகியோர் என்ஜினீயரிங் கட்-ஆப் 200/200 மதிப்பெண்களும், மாணவி பிரவினா வேளாண் கட்-ஆப் 200/200 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவி கஜலட்சுமி, 600-க்கு 594 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 2-வதாக 593 மதிப்பெண்ணை சிவரஞ்சனியும், ஹரி விக்னேசும், 3-வதாக 590 மதிப்பெண்களை சிவராம், பிரீத்தி ஆகிய மாணவ-மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தலைவர் ராஜா கிளைமாக்ஸ் பாராட்டினார். அவர் கூறுகையில், சி.இ.ஓ.ஏ. பள்ளியில் 105 சென்டம் பெற்று மாணவர்கள் சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியடைய செய்கிறது.

    கணிதத்தில் 12 மாண வர்களும், இயற்பியலில் 7 மாணவர்களும், கெமிஸ்ட்ரி பாடத்தில் 27 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 4 மாணவர்களும், கணினி பாடத்தில் 15 மாணவர்களும், பொருளியல் பாடத்தில் 3 மாணவர்களும், அக்கவுண்டன்சி பாடத்தில் 14 மாணவர்களும், காமர்ஸ் பாடத்தில் 9 மாணவர்களும் சென்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர் என்றார்.

    சாதனை மாணவர்களை பள்ளி இணைத் தலைவர் சாமி, துணைத் தலைவர்கள் விக்டர் தனராஜ், சவுந்தரபாண்டி, ஜெயச்சந்திர பாண்டி, அசோகராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், முதல்வர்கள் கலா, கோமுலதா ஆகியோர் பாராட்டினர்.

    ×