search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central ministries"

    • நிதியை லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.
    • லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.

    2023-24 நிதியாண்டில் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.36.65 கோடியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    யூனியர் பிரதேசம் நிர்வாகம் ரூ.36.65 கோடி நிதியை, அது கிடைத்த நாளிலிருந்து அதிகபட்சம் 30 நாட்களுக்குள் லடாக் கிராம சாலை மேம்பாட்டு முகமைக்கு மாற்ற வேண்டும்.

    இந்த காலக்கெடுவிற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

    மேலும் வெளியீடுகளை நிறுத்த மத்திய அரசும் கட்டுப்படுத்தப்படலாம்.

    ரூ.36,65,62,500 கார்பஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் தனது எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் யூனியன் பிரதேசத்தில் சாலைகள் மற்றும் பாலங்கள், மாவட்ட சாலைகள் மற்றும் பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும்.

    பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின் கீழ் லடாக்கிற்கு 2023-24 ஆண்டு ஒதுக்கீடு திட்ட நிதியின் முதல் தவணை இது.

    பிரதான் மந்திரி கிராம சடக் யோஜனா திட்டத்தின், மூன்றாம் கட்டத்தின் கீழ், லடாக்கில் 500 கிமீ கிராமப்புற சாலை வலையமைப்பை அமைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மத்திய அமைச்சர் வருகையொட்டி திருப்பதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரூ.840 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உள்ளிட்ட பல்வேறு சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    ஆந்திராவில் புதிய சாலை திட்டப்பணிகள் தொடக்க விழா நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார்.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்கிறார். நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    காலை 10 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராயல சீமாவில் உள்ள திருப்பதி, நெல்லூர், அனந்தபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.9,213 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    நாயுடு பேட்டையில் இருந்து கிருஷ்ணபட்டினம் வரை ரூ.1,399 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 35 கிலோ மீடடர் 6 வழிச்சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல் ரூ.28.99 கோடி மதிப்பில் மதனப்பள்ளி, பீலேரு, திருப்பதி இடையிலான 4 வழி சாலையும், கொத்தூர் கோரண்ட்ல இடையே ரூ.840 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உள்ளிட்ட பல்வேறு சாலை திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    ×