search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central minister Suresh prabhu"

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை பெற்று தருமாறு பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். #JetAirways
    புதுடெல்லி:

    இந்தியாவின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.

    கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன.

    இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ள 40 விமானங்களை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் வாங்க உள்ளது.

    இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்டுகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்க மாட் டோம் என்று தெரிவித்து உள்ளனர்.


    மேலும் பிரதமர் மோடி மற்றும் விமான போக்குவரத்து மந்திரி சுரேஷ்பிரபு ஆகியோர் இதில் தலையிட்டு சம்பள பாக்கியை பெற்று தரவேண்டும். நிறுவனத்தை காப்பாற்றும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊழியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பைலட்டுகளில் 250 பேர் இதில் இருந்து விலகி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக இந்திய விமான சங்கத்தினர் “ஏர் லைன் நிறுவனங்கள் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளன. இதை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். #JetAirways
    சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச மெஷின் டூல்ஸ் கண்காட்சியை மத்திய தொழில்துறை மந்திரி சுரேஷ்பிரபு தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஏ.சி.எம்.இ.இ. மெஷின் டூல்ஸ் தொழில் நுட்ப கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தொடங்கியது.

    மத்திய தொழில்துறை மந்திரி சுரேஷ்பிரபு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பென்ஜமின், ஏ.சி.எம்.இ.இ. தலைவர் அய்யப்பன், சதீஷ்பாபு, அசோக் சோர்டியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

    இக்கண்காட்சியில் உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கக் கூடிய மெஷின் டூல்ஸ் தொழில் நுட்பம் இடம் பெறுகிறது.

    இதில் 28 நாடுகளைச் சேர்ந்த 480 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. #Tamilnews
    ×