என் மலர்
நீங்கள் தேடியது "Center for Philosophy"
- கடந்த 2.5.2023 அன்று வீட்டிலேயே இரட்டை குழந்தைகள் (பெண்-800கிகி., மற்றும் ஆண்- 900கிகி) பிறந்தது.
- குழந்தைகளை சிகிச்சைக்காக சேர்த்த போது பெண் குழந்தை இறந்துவிட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வரதப்பம்பாளையம் காமாட்சி வலசு பகுதியை சேர்ந்த சின்னச்சாமி -வெள்ளையம்மாள் தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2.5.2023 அன்று வீட்டிலேயே இரட்டை குழந்தைகள் (பெண்-800கிகி., மற்றும் ஆண்- 900கிகி) பிறந்தது. குழந்தைகள் பிறக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் காங்கயம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளை சிகிச்சைக்காக சேர்த்த போது பெண் குழந்தை இறந்துவிட்டது. ஆண் குழந்தைக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் 10.5.2023 அன்று பெற்றோர்கள், குழந்தையை வேண்டாம் என தெரிவித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுவிட்டு சென்று விட்டனர். 8.8.2023 அன்று குழந்தை நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், குழந்தையின் எடையை (எடை 900கி.கி.,லிருந்து 1.846கி.கி.,) அதிகரித்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்க தயார் நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, குழந்தையின் எதிர்கால நலன் கருதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக 16.8.2023 அன்று குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்த ப்பட்டு, குழந்தைக்கு நாகேஷ்வர ராவ் என பெயரிடப்பட்டு, குழந்தையை குழந்தைகள் நலக்குழுவின் ஆணைப்படி திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் தத்துவள மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ரியாஸ் அகமது பாசா தெரிவித்துள்ளார்.






