என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Census of Foreigners"

    • கார்த்திகை தீப விழாவையொட்டி நடவடிக்கை
    • கோவில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த எஸ்.பி. பேட்டி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான பரணி தீபம், மகாதீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலை மையிலான போலீசார் திரு வண்ணாமலை பஸ் நிலை யம், ரெயில் நிலைய பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து தேரடி வீதியிலும், அருணாசலேஸ்வ ரர் கோவில் உட்புறத்திலும் சோதனை நடத்தினர். பின்னர் போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

    3-ந் தேதி (சனிக்கிழமை) மாடவீதியில் பஞ்சரத தேரோட்டம் வலம்வரஉள்ள தினத்தன்று 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடர்ந்து வருகிற 6-ந்தேதி மகா தீபத்தன்று தமிழகம் முழுவதிலும் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    திருவண்ணாமலை நகரத் திற்கு உள்ளே வர உள்ள 9 0 சாலைகளில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டு பக்தர்களுக்காக அந்த இடத்தில் அனைத்து அடிப் படை வசதிகளும் தயார் செய் யப்பட்டு வருகின்றது.

    மகா தீபத்தன்று திருவண் ணாமலைக்கு வருகை தர உள்ள குழந்தைகளின் பாது காப்பை உறுதி செய்ய 20 ஆயிரம் ரெஸ்ட் பேண்ட் (மணிகட்டு பட்டை) கொடுக்கப் பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் தொலைந்து போனால் எளிதில் கண்டுபி டிக்க ஏதுவாக இருக்கும். தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதி, நகரப்ப குதி, புறவழிச்சாலை, மாவட்ட எல்லை என 5 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதில் வாகன தணிக்கை, பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் பய ணிகளின் உடைமைகளை சோதனை செய்வது உள் ளிட்ட பணிகளுக்கு 15 குழுவி னர் ஈடுபடுத்தப்பட உள்ள னர்.

    வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து திரு வண்ணாமலைக்கு வருகை தருபவர்கள் தீவிரமாக கண் காணிக்கப்பட்டு வருகின்ற னர். மேலும் திருவண்ணாம லையில் தங்கி உள்ள வெளி நாட்டினர் குறித்து கணக்கெ டுக்கப்பட்டு வருகின்றது.

    திருவண்ணாமலை நகரத் திற்குள் ஆன்லைன் மூலம் 12 ஆயிரம் கார்கள் பார்க்கிங் செய்ய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×