search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cement stones"

    • பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
    • அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    மதுரை:

    மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கை யால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.

    இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடியில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்து உள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இதன் மூலம் இந்தியாவில் குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.

    ×