search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CCTV Surveillance Camera"

    • சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிய வந்தது.
    • கண்காணிப்பு காமிரா மூலம் சிக்கினான்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் ஹாஜாமா வாமைதீன். இவர் அதே பகுதி சீயா மறைக்காயர் தெருவில் அமைந்துள்ள தவ்ஹீத் மஸ்ஜித் பள்ளி–வாசலில் தொழு கைக்காக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளை பள்ளிவாசல் வாசலில் நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சை்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி–யடைந்த ஹாஜாமா வாமைதீன் அருகில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் நாகூர் காவல் நிலையத்தில் ஹாஜாமாவாமைதீன் புகார் அளித்திருந்தார் அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே ேபாலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போது நாகூரில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை ஒட்டி சென்ற மர்ம நபரை பிடித்து நாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதைத் தொடர்ந்து நாகூர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மோட்டார் சைக்கிளை திருடியது. சிதம்பரம் காட்டுமன்னார் குடியைச் சேர்ந்த அப்பு சலலு என்பதும், அவர் மோட்டார் சைக்கிளை கள்ள சாவி போட்டு திருடி செல்வது கில்லாடி என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×