search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car entered a garden hit an electric pole"

    • காரில் பயணம் செய்த செந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையில் கேரள பதிவெண் கொண்ட கார் வந்துகொண்டிருந்தது. அம்பிளிக்கை போலீஸ் நிலையம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

    பின்னர் சாலையில் இருந்து கீழே இறங்கி விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. காரில் பயணம் செய்த செந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன், வினோத், ஷோபனா, சுஷீலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கம்பத்தில் மோதியபோது மின்வினியோகம் துண்டிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 4 பேரும் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர்.

    ×