search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car caught on fire"

    • வனப் பகுதியில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாா்.
    • காரில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது

    உடுமலை : 

    திருப்பூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவா் தனது காரில் குடும்பத்துடன் சின்னாறு வனப் பகுதியில் உள்ள கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாா்.அப்போது, காரில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. இதனைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சிவகுமாா், அவா்களது குடும்பத்தினா் அலறியடித்துக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கினா். சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பிடித்தது.இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் துறையினா் சுமாா் அரை மணி நேரம் போராடி காரில் பரவிய தீயை அணைத்தனா். இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×