என் மலர்
நீங்கள் தேடியது "Cannabis-free grams"
- ஓமலூர் காவல் நிலைய எல்லையில் உள்ள முத்து–நாயக்கன்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
- முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலைய எல்லையில் உள்ள முத்து–நாயக்கன்பட்டி, பல்பாக்கி ஆகிய கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமங்களாகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன.
முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்–பட்டது. இதில், ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்–குமரன், நாகப்பன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், இந்தக் கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக உருவாக்கிய மக்களுக்கு பாராட்டு தெரிவித்தஇன்ஸ்பெக்டர் செல்வராஜன், இளை–ஞர்கள் புகை , மது பழக்கம் இல்லாமல் குடும்பத்தைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.






