search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BUSTLING WITH PEOPLE"

    • கடைவீதிகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
    • தீபாவளியை முன்னிட்டு

    பெரம்பலூர்

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காகவும், இனிப்பு வகைகள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காகவும் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.

    பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, சூப்பர் பஜார், பள்ளிவாசல் தெரு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அந்தப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஜவுளிக்கடைகளிலும் புது ஆடை வாங்குவதற்காக மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் படையெடுத்து வந்தனர்.

    ஆனால் கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் துணிமணிகள் மற்றும் மற்ற பொருட்களின் விலை சற்று அதிகமாகவே காணப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையிலான சாலையில் திடீரென தற்காலிக இனிப்பு கடைகள், பட்டாசு கடைகள் வைக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது.

    பெரம்பலூர் கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக ஏராளமான தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு வியாபாரிகள் ஆடைகளை கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் பொதுமக்கள் பேரம் பேசி ஆடைகளை வாங்கி சென்றனர்."

    ×