என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Budget presentation public meeting"

    • முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரன் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிக்கூண்டு அருகில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் ஏசி மணி அனைவரையும் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தர், துரைமாமது, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தலைமை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் எம்.பியுமான கம்பம் செல்வேந்திரன் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சிவானந்தம், தயாநிதி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன். மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் கோவர்த்தனன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஞ்சித் மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், மாவட்ட துணை சேர்மன் ராஜேந்திரன், நகரப் பொருளாளர் அக்பர், நகர மன்ற உறுப்பினர்கள் இஷ்ரத்ஜபின் அப்ஷல், ரிஷ்வானா மாலிக் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஷர்மிளா தரணி, நந்தினி கண்ணன், பழனி ராஜேஸ்வரி முரளி, குப்பு சங்கர், சூரியகலா சுந்தரம் ஆதிதிராவிடர் நலக்குழ துணை அமைப்பாளர் இளையராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    இறுதியில் நகர மன்ற உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.

    ×