search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bowing of the head"

    • லண்டனில் பென்னிகுயிக் சிலை மூடல்; தமிழகத்துக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று வயலூரில் அன்ன தானம் நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஜீவாதார உரிமையாக இருக்கிற முல்லைப் பெரியாறு அணையை கட்டிய, ஜான்பென்னிகுயிக் சிலை தமிழக அரசின் சார்பில் லண்டனில் அமைக்கப் பட்டது.

    லண்டன் கேம்பர்லியில் உள்ள பென்னிகுயிக் சிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். அப்போது இங்கிலாந்து ராணி இறந்து விட்டதால், அந்த விழாவை சம்பிரதாயமாக நடத்தினார்.

    இந்த சிலை அமைக்கவும், பராமரிக்கவும் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ10.65 லட்சம் ஒதுக்கியது. ஆனால். கூடுத லாக ரூ.28 லட்சம் செலவாகி விட்டதாக கூறி பாக்கி தொகை கேட்டு சிலை மூடப்பட்டுள்ளது.

    அந்த தனியார் நிறுவ னத்திற்கு அரசு பாக்கி வைத்துள்ளதா? அரசு நிர்ணயித்ததை விட அந்த கூடுதல் செலவை தமிழக அரசு கொடுக்க முன் வந்ததா? கொடுத்ததா? இதில் தமிழக அரசு அவர்களை ஏமாற்றியதா? அல்லது தனியார் நிறுவனம் தமிழக அரசை ஏமாற்றி இருக்கிறார்களா? என்பதெல்லாம் இன்று விவாதமாக இருக்கிறது. இது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக தன் சொத்து களை விற்று இன்றும் உறுதியாக, பாது காப்பாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்த ஜான் பென்னிகுயிக் சிலை யை மீண்டும் லண்டனில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×