என் மலர்
நீங்கள் தேடியது "BJP in Tamil Nadu"
- அரக்கோணம் தொகுதி பொறுப்பாளர் பேச்சு
- தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ெநல்லூர்பேட்டை பகுதியில் பா.ஜ.க. கிளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு நெமிலி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சுதாகர்ஜி தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அரக்கோணம் பாராளுமன்ற பார்வையாளர் ரமேஷ்குமார் கலந்து கொண்டார் அவர் பேசியதாவது:-
மாதந்தோறும் பா.ஜ.க. சார்பில் அனைத்து கிராமங்களிலும் கிளைக் கூட்டம் கட்டாயம் நடத்த வேண்டும். பெண்கள் உள்ளிட்டர்வர்களை அதிகளவில் கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும்.
பா.ஜ.க. கொள்கை செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ஜ.க. மட்டுமே என்பதற்கு எடுத்துக்காட்டாக வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி வாய்ப்பை பெறுவதற்கு இன்றுமுதல் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது ஒன்றிய பார்வையாளர் கீதா ரகுபதிராஜ் ,கிளைத் தலைவர்கள் செல்வம், கார்த்திக், சக்தி கேந்திரா பொறுப்பாளர் புருஷோத்தமன் மற்றும் கிளைக்கு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






