search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavani youth death"

    பவானியில் மீன் பிடிக்க சென்ற லேத் பட்டறை ஊழியர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சுதாகர் (வயது 22.) இவர் காடையாம்பட்டியில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வேலை செய்தார். நேற்று மதியம் மீன் பிடிப்பதற்காக மூலப்பாளையம் ஆற்றங்கரைக்கு சென்றார்.

    அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் இறங்கிய அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    அந்த பகுதியை சேர்ந்தவர்களும், மீனவர்களும் சேர்ந்த ஆற்றில் மூழ்கி இறந்த சுதாகர் உடலை மீட்டனர்.

    அவரது உடல் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×