என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bettison Mela"

    • ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டு விசாரித்தார்.
    • பெறப்பட்ட அனைத்து புகார் மனுக்கள் மீதும் உடனே விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெட்டிசன் மேளா நடந்தது. இதை அறிந்த மலைவாழ் மக்கள் பலர், காலையிலேயே போலீஸ் நிலையம் வந்து காத்திருந்து மனுக்களை வழங்கினர்.

    ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று கொண்டு விசாரித்தார். இதில், பெறப்பட்ட அனைத்து புகார் மனுக்கள் மீதும் உடனே விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.

    மேளாவில் 67 மலை கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் சப்-இஸ்பெக்டர்கள் ஆனந்தன், குணசேகரன், பரந்தாமன் மற்றும் போலீ சார் கலந்து கொண்டனர்.

    ஏற்காட்டில் உள்ள மலை கிராமங்களில் வாழும் மலைவாழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றை தீர்க்க மாதம் ஒரு முறையாவது, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து பொதுமக்களிடம் புகார் பெற்று விசாரிக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×