search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Berijam Lake In Kodaikanal"

    • காலாண்டுதேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடு முறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
    • பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு கடந்த சில நாட்களாக காலாண்டுதேர்வு விடுமுறை மற்றும் ஆயுதபூஜை விடு முறையையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். குணாகுகை, மோய ர்பாயிண்ட், பைன்மரக்காடு கள், பில்லர்ராக், பிரைய ண்ட் பூங்கா, படகுகுழாம் என அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர். கொடை க்கானலில் தற்போது அவ்வப்போது சாரல்மழை பெய்து வெப்பத்தின் தாக்கமே இல்லாத அளவிற்கு இதமான சூழல் நிலவி வருகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஹோட்டல், விடுதிகள், சாலையோர கடைகள், வாகனஓட்டுனர்கள், வழிகாட்டிகள் ஆகியோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து அதனை புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்ற னர். மக்கள் கூட்டம் அதிகரிப்பால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் வனத்து றை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல கடந்த வாரம் தடைவிதிக்கப்பட்டி ருந்தது. இங்கு தொப்பி தூக்கு ம்பாறை, பேரிஜம் ஏரியின் கழுகுப்பார்வை, அமைதி ப்பள்ளத்தாக்கு, மதிகெட்டா ன்சோலை ஆகியவை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி பார்க்கும் இட மாகும்.

    இப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்ததால் வனத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது அந்த யானைகள் முற்றிலும் அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டது. இதனால் பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து பேரிஜம் ஏரியில் குவிந்து வருகின்றனர்.

    கொடைக்கானலில் சூறைக்காற்று வீசியதால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்து வருவதால் நகர் பகுதியில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நேற்றும் பலத்த காற்று வீசியதால் நட்சத்திர ஏரிச்சாலை, பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இரவு முழுவதும் பொதுமக்கள் இருளில் தவித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் பேரிஜம் ஏரி பகுதியில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் மரம் முறிந்து விழும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் சவுக்கு, பைன் போன்ற மரங்கள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலையில் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காற்றின் வேகம் குறைந்த பின் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.



    ×