search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Benedict"

    • குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்த பெனடிக்ட்டினுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    வாடிகன்:

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ்.

    இவருக்கு முன்பு போப்பாண்டவராக 16-ம் பெனடிக்ட் இருந்து வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு அவர் வாடிகனில் உள்ள குருமடத்தில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். 95 வயதாகும் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக வாடிகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட்டின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதுபற்றி இப்போதைய போப் பிரான்சிஸ் வாடிகன் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையின் போது தெரிவித்தார்.

    அப்போது போப்பாண்டவர் பெனடிக்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    தமிழ், இந்தியில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, 8 வருடங்களுக்கு முன்பே லண்டனை சேர்ந்த இசைக் கலைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும், தனது திருமணம் பற்றி பலருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார். #RadhikaApte
    தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும், லண்டனை சேர்ந்த இசைகலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர்.

    திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    “நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும்.



    நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். சண்டை போட்டால் உன்னுடன் பேச விருப்பம் இல்லை என்றோ, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்றோ சொல்வது இல்லை. சில நிமிடங்களிலேயே இருவரும் பேசிவிடுவோம்.

    யார் மீது தவறு இருந்தாலும் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டு நீண்ட நாட்கள் பேசாமல் இருந்தால் பிரச்சினைகள் பெரிதாகி விடும். சண்டையை மனதில் வைத்துக்கொள்ளாமல் மறந்துவிடுவோம். எனக்கும், எனது கணவருக்கும் எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. நீ என்னை மதிக்கவில்லை. முக்கியத்துவம் தரவில்லை என்றெல்லாம் ஒருமுறை கூட சொன்னது இல்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார். #RadhikaApte #Benedict

    ×