search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beating fishermen"

    ஆத்தூர் அருகே உள்ள பழையகாயலில் மீனவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரி

    ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜா. மீனவர். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஆக்னஸ். நேற்று ஆக்னஸ் மனைவி வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற ராஜா வளர்த்து வரும் நாய், ஆக்னஸ் மனைவியை தாக்கியுள்ளது. 

    இதில் ராஜாவுக்கும், ஆக்னசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆக்னஸ், அவரது நண்பர்களான நீரோன், தேரடிமுத்து ஆகியோருடன் சேர்ந்து ராஜாவை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேரடிமுத்து, நீரோன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ஆக்னசை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×