என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barrage in Bala"

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
    • கோரிக்கை மனு அனுப்பப்பட்டது

    வேலூர்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு இன்று வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வேலூர் மாவட்ட குழு செயலாளர் ஜி.லதா கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதன்விவரம் வருமாறு:-

    வேலூர் மாநகரம் போக் குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண காட்பாடி முதல் பாகாயம் வரை, காட்பாடி முதல் தொரப்பாடி வரை, சத்துவாச்சாரி.சி.எம்.சி. வழியாக மாங்காய் மண்டி வரை மேம்பாலங்கள் அமைத்திட வேண் டும். காட்பாடி பழைய பாலாறு மேம்பாலம் இணைக்கும் வழியை சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊசூர் அருகே உள்ள 90 ஏக்கர் முந்திரி தோப்பு நிலப்பகுதியில் வேலூர் மாவட்டத் துக்கான சிப்காட் தொழிற் பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை- பெங்களூரு இடையில் வேலூர் மையப்ப குதியில் சீன நிறுவன ஆய்வு அறிக்கையின் அடிப்படை யில் வேலூர் பகுதியில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும்.

    வேலூர் புதிய பஸ் நிலை யத்தில் டவுன் பஸ்கள் நிற்க நிழற்குடை இல்லை. அங்கு அரசு துறைகளுக்கு ஒதுக்கப் பட்ட அறைகளில் கதவுகள் இல்லை. கடைகள் ஏலம் விடுவது 6 முறைகளுக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.

    அணைக்கட்டு தொகுதியில் மலர்கள் அதிகம் உற்பத்தி ஆவதால் சென்ட் தொழிற்சாலையும் குடியாத்தம், காட் பாடி. கே.வி.குப்பம் பகுதி களை மையப்படுத்தி குடியாத் தம் பகுதியில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். பாலாற்றில் நீர்வ ரத்து உள்ளதால் தடுப்பணை அமைக்க வேண்டும். மேல் அரசம்பட்டு அணைக்கட்டு திட்டத்தையும், பேரணாம்பட்டு பத்திரப்பல்லி அணைக் கட்டுதிட்டத்தையும் விரைந்து முடிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 30 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×