search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank link"

    தஞ்சை ஆர்.எம்.எச். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு 3 வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆர்.எம்.எச். சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் முன்பு 3 வங்கிகளின் இணைப்பை கைவிடக்கோரி தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு  சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். 

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி ஆகிய 3 வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.  வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு வங்கிகளை பொதுவுடமை ஆக்குவதை கைவிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி குருநாதன், அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரி சங்க நிர்வாகி மோகனசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் 3500 வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ×