என் மலர்
நீங்கள் தேடியது "Ayyalur Railway Tunnel"
- மழை பெய்தாலே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதும், அதனை கடந்து செல்ல வாகனங்கள் செல்ல சிரமப்படுவதும் வாடிக்கை யாக உள்ளது.
- சுரங்கப்பாதையில் சிக்கிக்கொள்ளும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே தென்புறமாக சுரங்கப்பாதை உள்ளது. மழை பெய்தாலே இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதும், அதனை கடந்து செல்ல வாகனங்கள் செல்ல சிரமப்படுவதும் வாடிக்கை யாக உள்ளது.
அதன்பிறகு ெஜன ரேட்டர் மூலம் தண்ணீர் அகற்றப்பட்ட பின்பு தேங்கி உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசி அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் மையமாக மாறி உள்ளது.
இது பல வருடங்களாக சீனாவின் பெருந்துயரம் போல அய்யலூர் சுரங்கப்பாதையில் நடந்து வருகிறது. இந்த பாலத்தை கடந்து பெட்டிநாயக்கன்ப ட்டி, கருஞ்சின்னானூர், குமரம்பட்டி, சுக்காவழி உள்ளிட்ட கிராம மக்கள் கடந்து சென்று வருகின்றனர். மழை பெய்தால் ஒதுங்க கூட இடம் கிடைக்காமல் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொள்ளும் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்ேடாபர் முதல் தேதி தூய்மை இந்தியா திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாள் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையம், பஸ் நிலையம், ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களை ெபாதுமக்கள் அனைவரும் அந்தந்த துறை அதிகாரிகளோடு இணைந்து சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தூய்மை இந்தியா தினம் நாளை நாடு முழுவதும் கடை பிடிக்க ப்படுகிறது. இன்றைய நாளிலாவது இந்த சுரங்கப்பா தைக்கு விடிவு காலம் பிறக்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கி ன்றனர்.






