என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Atrocities Act"
- கடையில் ஆளில்லாத–தால் பொருட்கள் வழங்க முடியாதென ரகுபதி தெரி–வித்ததாக கூறப்படுகிறது.
- கண்ணையன், பிரபு ஆகிய இருவரையும் சாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரகுபதி (வயது 23).
இவரது மளிகைக் கடைக்கு நேற்று முன்தினம் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையன்(46), இவரது உறவினர் பிரபு(42) ஆகியோர் பொருட்கள் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
தகராறு
கடையில் ஆளில்லாத–தால் பொருட்கள் வழங்க முடியாதென ரகுபதி தெரி–வித்ததாக கூறப்படுகிறது.
இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரகுபதியும், அவரது உறவினர் வெங்கடேஷ்(32) ஆகியோர் சேர்ந்து, கண்ணையன், பிரபு ஆகிய இருவரையும் சாதியின் பெயரை சொல்லி திட்டியதுடன், அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த கண்ணையன், பிரபு ஆகியோர் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வன்கொடுமை சட்டம் பாய்ந்தது
இதுகுறித்து, கண்ணையன் கொடுத்த புகாரின் பேரில், ரகுபதி, வெங்கடேஷ் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி ஹரிசங்கரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தன்னையும், உறவினர் வெங்கடேசையும், கண்ணையன், பிரபு ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ரகுபதி, வாழப்பாடி போலீசில் புகார் செய்துள்ளார்.
இவரது புகாரின் பேரிலும், கண்ணையன், பிரபு ஆகியோர் மீது வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கிராமத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால், சமூக மோதலை தடுக்க அந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்