என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashram worker"

    வங்கி அதிகாரி பேசுவது போல் நடித்து ஆசிரம ஊழியரிடம் பணம் மோசடி செய்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

     புதுவை சஞ்சீவ் நகர் சினிமா தியேட்டா தெருவை சேர்ந்தவர் கோபால் காத்ரி. அரவிந்தர் ஆசிரம ஊழியர்.இவருக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு உள்ளது. இந்த வங்கியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் அட்டை வந்தது.இந்தநிலையில் சமீபத்தில் அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய பெண் தான் வங்கியிலிருந்து அதிகாரி பேசுவதாக கூறினார். மேலும் உங்களுடைய கடன் அட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் மருத்துவ காப்பீடு தானாகவே செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

    சில நேரங்களில் தவறுதலாக மருத்துவ காப்பீடு தனாகவே செயல்படுத்தப்பட்டுவிடும் அதனை ரத்து செய்து விடுவதாக தெரிவித்தார். மேலும் உங்களுடைய செல்போனுக்கு அனுப்பியுள்ள ரகசசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறினார்.  இதனை உண்மையென நம்பிய கோபால் காத்ரி  ரகசிய குறியீட்டு எண்ணை அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.பின்னர் பேசிய அந்த பெண் மருத்துவ காப்பீட்டை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்தநிலையில் கடைசி மாதத்திற்கான கடன் அட்டையின்  அறிக்கை அவருக்கு வந்தது. அதை கோபால் காத்ரி ஆய்வு செய்த போது அதில் தனியார் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுக்கு ரூ.29 ஆயிரம் எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து கோபால் காத்ரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி அதிகாரி  பேசுவதாக கூறி ஆசிரம ஊழியரிடம் பணம் பறித்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×