search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artist Women Rights Amount"

    • டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கினர்
    • முதல் நாளான நேற்று மாவட்ட முழுவதும் 42 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

    அதன்படி மாவட்டத்தில் முழு நேரம், பகுதி நேரமாக இயங்கி வரும் மொத்தம் 614 ரேசன் கடைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

    இந்த கடைகளின் மூலம் 2லட்சத்து 59 ஆயிரத்து 344 குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல் நாளான நேற்று மாவட்ட முழுவதும் 42 ஆயிரத்து 415 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 உரிமை தொகை பெற விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக வழங்கினர்.

    ×