என் மலர்
நீங்கள் தேடியது "arokiya madha"
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் அற்புதஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்திருவிழா கடந்த 27-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. இதன் நிறைவு நாள் அன்று ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது.
முன்னதாக ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு தேரை புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை மைக்கேல் அடிகளார், தஞ்சை தூய மரியன்னை இளம் குருமட அதிபர் அகஸ்டின் அடிகளார் ஆகியோர் ஆகியோர் புனிதம் செய்து தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தேர்பவனி நடைபெற்றது.
முதலில் காவல்சம்மனசு சிறிய தேர் வர அதைத்தொடர்ந்து சூசையப்பர், மரியாள், இருதய ஆண்டவர், ஆரோக்கிய அன்னை தேர் என 5 தேர் பவனி வந்தது. தேர் ஆலயத்தில் இருந்து தொடங்கி மாதாகோவில் தெரு வழியாக ஊரை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி லாரன்ஸ்அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுன்மை வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபியான்அடிகள், அருட்சகோதரிகள், கிராம மக்கள் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.
முன்னதாக ஜெபமாலை மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 9.45 மணிக்கு தேரை புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை மைக்கேல் அடிகளார், தஞ்சை தூய மரியன்னை இளம் குருமட அதிபர் அகஸ்டின் அடிகளார் ஆகியோர் ஆகியோர் புனிதம் செய்து தொடங்கி வைத்தனர். அதன் பின்னர் தேர்பவனி நடைபெற்றது.
முதலில் காவல்சம்மனசு சிறிய தேர் வர அதைத்தொடர்ந்து சூசையப்பர், மரியாள், இருதய ஆண்டவர், ஆரோக்கிய அன்னை தேர் என 5 தேர் பவனி வந்தது. தேர் ஆலயத்தில் இருந்து தொடங்கி மாதாகோவில் தெரு வழியாக ஊரை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி லாரன்ஸ்அடிகளார் தலைமையில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுன்மை வழங்கும் விழா நடைபெற்றது. பின்னர் கொடியிறக்கம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பபியான்அடிகள், அருட்சகோதரிகள், கிராம மக்கள் மற்றும் பங்குமக்கள் செய்திருந்தனர்.






