என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archery event"

    • வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி கொலு சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கம்
    • கோதை மங்கலத்தில் மேல் அம்பு எய்தல் நிகழ்வில் சூரன் வதம் நடக்கும். அம்பு எய்தல் நிகழ்ச்சிக்கு பின் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவிலுக்குள் வந்தடைந்தது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி கொலு சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் நவராத்திரி கொலு வைத்து ஒவ்வொரு நாளும் முத்துமாரியம்மன், காமாட்சியம்மன், வெங்கடாஜலபதி, முருகன், வள்ளி-தெய்வானை, சரஸ்வதி, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நவராத்திரி கொலு நிறைவு நாளன்று குதிரை வாகனத்தில் முத்துமாரியம்மன் புறப்பட்டு கோதை மங்கலத்தில் மேல் அம்பு எய்தல் நிகழ்வில் சூரன் வதம் நடக்கும். அம்பு எய்தல் நிகழ்ச்சிக்கு பின் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தை சுற்றி வந்து கோவிலுக்குள் வந்தடைந்தது.

    நிகழ்ச்சியில் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி குழு தலைவர் அன்பு, கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், திருவண்ணாமலை ரெப்போ பேங்க் மேலாளர் கனகராஜ், பூசாரி கண்ணன், சக்தி, ஜெகதீஸ்வரன் மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள், முத்துமாரியம்மன் கோவில் உற்சவ கமிட்டியாளர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பிரசாதத்தை பெற்று சென்றனர்.

    ×