என் மலர்
நீங்கள் தேடியது "Arani water"
வேலூர்:
ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதி பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டு மனுக்கள் கொடுத்தனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். நகர் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் ஆரணி- வாழப்பந்தல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.