search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aquaculture"

    • விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த விளைநிலங்களில், பண்ணைக்குட்டை அமைக்க வேளாண்துறை மற்றும் இதர துறைகள் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
    • உள்நாட்டு மீன் ரகங்களை வளர்ப்பதால், மீன் உற்பத்தியும் அதிகரிக்கும்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. குறிப்பாக கிணறு மற்றும் போர்வெல் அமைத்து, காய்கறி பயிர் மற்றும் நீண்ட கால பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் விவசாயத்துக்கு ஆதாரமான நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த விளைநிலங்களில், பண்ணைக்குட்டை அமைக்க வேளாண்துறை மற்றும் இதர துறைகள் சார்பில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக பண்ணைக்குட்டை அமைக்க மானியமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பண்ணைக்குட்டைகளில் மழை நீரை சேகரிப்பதுடன் கிணறு மற்றும் போர்வெல் தண்ணீரை இருப்பு செய்து பயிர்களுக்கு பாய்ச்சும் முறையையும் விவசாயிகள் பின்பற்றுகின்றனர். எனவே ஆண்டு முழுவதும் இந்த பண்ணைக்குட்டைகளில் தண்ணீர் இருப்பு இருக்கும்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    பெரும்பாலான விளைநிலங்களில், பண்ணைக்குட்டைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த குட்டைகளில் மீன் வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும். குறிப்பாக உள்நாட்டு மீன் ரகங்களை வளர்ப்பதால், மீன் உற்பத்தியும் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருவாயும் கிடைக்கும். எனவே மீன் வளர்ச்சி கழகம் வாயிலாக பண்ணைக்குட்டைகளில் மீன் வளர்ப்புக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றனர்.  

    ×