என் மலர்
நீங்கள் தேடியது "Applications are welcome online"
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை
- கலெக்டர் வளர்மதி தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 13 பள்ளி விடுதிகளில் காலியாக உள்ள 445 இடங்களுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.
விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன. மாணவ - மாணவிகள் 12-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு குழுவால் விடுதியில் தங்கும் மாணவர்கள் வருகிற ஜூலை 15-ந் தேதி தேர்வு செய்யப்படுவர்.
4-ம் வகுப்பு முதல் வரை பயிலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் (85 சதவீதம்) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணவர் 10 சதவீதம் பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.
பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவருக்கு கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பள்ளி மாணவருக்கும் எமிஸ் எண் மற்றும் மாணவர்களுக்கு மத்திய/மாநில அரசால் கல்வி உதவித்தொகை பெறுவதற்காக இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம் பெற்றிருக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






