search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Application in July"

    • அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன.
    • இரண்டாம் கட்ட எந்திரம் கொள்முதலுக்கான பணிகள் தற்போது நடந்துவருகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் ரோடு, பலவஞ்சிபாளையம் ரிங் ரோட்டில் அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.தொழில் பாதுகாப்புக்குழு, பின்னலாடை உற்பத்தி துறையினர் 50 பேர் இணைந்து மத்திய, மாநில அரசு மானியத்துடன் மொத்தம் 16.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில்இம்மையத்தை உருவாக்கி வருகிறது.

    மதிப்பு கூட்டு ஆடை உற்பத்திக்கு கைகொடுக்கும்வகையில் அதிநவீன பிரின்டிங் எந்திரங்கள் பொது பயன்பாட்டு மையத்தில் நிறுவப்படுகின்றன.முதல்கட்டமாக ஆர்டர் செய்யப்பட்ட எந்திரங்களில் ஆட்டோமேட்டிக் டிரையருடன் கூடிய கிளாஸ் பிரின்டிங் எந்திரம், காஸ் கியூரிங் எந்திரங்கள் சமீபத்தில் திருப்பூர் வந்து சேர்ந்தன. எந்திரங்களை நிறுவும் பணிகள் நடந்துவருகின்றன.துருக்கியிலிருந்து ஐந்து ரவுண்ட் டேபிள் பிரின்டிங் எந்திரம், சீனாவிலிருந்து ஒரு ஓவல் பிரின்டிங் எந்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றன.இவ்விரு எந்திரங்களும் வந்து சேர்ந்தவுடன் அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மையத்தை இயக்கத்துக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு மைய நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரம் கூறியதாவது:-

    அதிநவீன பிரின்டிங் எந்திரங்களுடன் அப்பேரல் கிளஸ்டர் பொது பயன்பாட்டு சேவை மையம் உருவாகிவருகிறது. முதல் கட்ட எந்திரங்கள் அனைத்தும் வந்து சேர்ந்தபின், வரும் ஜூலை மாதம் பொது பயன்பாட்டு சேவை மைய இயக்கத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம்.இரண்டாம் கட்ட எந்திரம் கொள்முதலுக்கான பணிகள் தற்போது நடந்துவருகின்றன. நவீன டிஜிட்டல் பிரின்டிங் எந்திரம், ராப்பியர் லேபிள் பிரின்டிங் எந்திரம், புதுமையான எம்ப்ராய்டரி எந்திரங்கள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும், அதிநவீன எந்திரங்களை பயன்படுத்தி சுலபமாக ஆடை ரகங்களில் பிரின்டிங் செய்வதற்கு இம்மையம் கைகொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×