search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anti set flyover"

    தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தக்கலை:

    தக்கலையை அடுத்த மணலி சந்திப்பில் இருந்து கொல்லன் விளை வரை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற உள்ளது.

    தக்கலையில் மேம்பாலம் கட்டினால் இந்த பகுதியில் உள்ள வர்த்தகர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    எனவே மேம்பாலம் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வர்த்தகர் சங்கம், வணிகர் சங்கம், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் இன்று தக்கலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஹனுக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முளகுமூடு வட்டார முன்னாள் குருகுல முதல்வர் ஜார்ஜ் பொன்னையா கலந்து கொண்டார்.

    மாவட்ட துணைத் தலைவர் டாக்டர் தம்பி விஜய குமார், மாவட்ட வக்கீல் அணி தலைவர் ஏசுராஜா, தக்கலை வட்டார தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட செயலாளர் ஜாண் இக்னேசியஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஷ் குமார், வின்சென்ட் ராஜ், புரோடிமில்லர் உள்பட திரளான காங்கிரசார் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×