என் மலர்
நீங்கள் தேடியது "Answer Key Correction Camp"
- பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 13-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகிறது.
- தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது.
நாமக்கல்:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 13-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத்தேர்வு 14-ந் தேதியும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முடிவடைகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 19 ஆயிரத்து 7 மாணவ, மாண வியர் எழுதுகின்றனர். மேலும், 357 பேர் தனித்தேர்வர்கள், 146 மாற்றுத்திறனாளி மாண வர்களும் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர்.
ஒவ்வொரு தேர்வு முடி விலும், வெளி மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்படும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத் தாள்கள், நாமக்கல் மாவட்டத்தில், அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நி லைப் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு டன் வைக்கப்பட்டு உள்ளன.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வருகிற ஏப்ரம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவிகள் ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்து கொள்ளலாம்.
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் இந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட த்தில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 விடைத்தாள்கள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அணியாபுரம் லிட்டில் ஏஞ்சல் மேல்நி லைப்பள்ளி, குருசாமிபா ளையம் வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 மையங்களில் திருத்தப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேற்பார்வையில், இதற்கான முகாம் அலுவலர்கள் நிய மிக்கப்பட்டு, விடைத் தாள்கள் திருத்தும் பணிக்கு தேவையான முன்னேற்பாடு கள் நடைபெற்று வருகிறது.






