search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra woman"

    • முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை கணவன் தனது செல்போனில் பார்த்துள்ளார்.
    • இதைக் கண்ட இரண்டாவது மனைவி ஆத்திரத்தில் கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.

    அமராவதி:

    ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த்பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார்.

    கணவன் ஆனந்த்பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு இரண்டாவது மனைவி வீரம்மா அதிர்ச்சி அடைந்தார்.

    இதுதொடர்பாக வீரம்மா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த்பாபு அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்த்பாபுவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த இரண்டாவது மனைவியின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்ததும், மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தார். இதனை பார்த்த ரெயில்வே போலீசார் சுஜிதாவை மீட்டு, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • போலீசில் சுஜிதா, தான் கடலூரை சேர்ந்த தனது காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 21). இவருக்கும், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த சுஜிதா (21) என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. பின்னர் இருவரும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இதற்கிடையே சுஜிதாவின், பெற்றோர் அவரது காதலை ஏற்காமல் வேறு இடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி சுஜிதா, தனது காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார்.

    அதன்படி ஆந்திராவில் இருந்து ரெயில் ஏறி கடலூர் வந்தார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் வந்ததும், மொழி தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தார். இதனை பார்த்த ரெயில்வே போலீசார் சுஜிதாவை மீட்டு, கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அப்போது போலீசில் சுஜிதா, தான் கடலூரை சேர்ந்த தனது காதலன் வெங்கடேசை தேடி வந்ததை தெரிவித்தார். இதையடுத்து போலீசார், வெங்கடேசுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரித்ததில் வெங்கடேஷ், சுஜிதாவை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்தார். ஆனால் சுஜிதா, அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து போலீசார், வெங்கடேசை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து போலீசார் தங்களது சொந்த செலவில் சீர்வரிசை பொருட்கள் வாங்கி கொடுத்து, வெங்கடேசுக்கும், சுஜிதாவுக்கும் திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து வெங்கடேஷ் தனது காதல் மனைவியை வீட்டுக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மொழி தெரியாமல் கடலூருக்கு வந்த பெண்ணுக்கு தனது காதலனை போலீசார் திருமணம் செய்து வைத்தது மட்டுமின்றி பெண்ணுக்கு தேவையான சீர்வரிசையும் போலீசார் வழங்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகளிர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    ×