என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andhra border inspection"

    • போலீஸ் ரோந்து வாகனங்களையும் அதில் உள்ள வசதிகளையும் கேட்டறிந்தார்
    • இ பீட் செயலியை போலீசார் முழுமையாக கற்க பயிற்சி அளிக்க அறிவுரை

    வேலூர்:

    தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. சங்கர் வேலூர் காவல் சரகத்தில் 2 நாள் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வேலூர் மாநகர் பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.

    தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ள காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். வாகன தணிக்கை மற்றும் சோதனை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அதன் தொடர்ச்சியாக சித்தூர் பஸ் நிலையத்திலும் இரவு நேர வாகன தணிக்கையை ஆய்வு செய்தார்.

    வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வாகனங்களையும் அதில் உள்ள வசதிகளையும் கேட்டறிந்தார்.

    அதனைத் தொடர்ந்து வேலூரின் முக்கிய பகுதியான மண்டி தெருவில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என்று முக்கிய தெருக்களில் நடந்து சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஒரு சில போலீசார் இ பீட் செயலியை முழுமையாக பயன்படுத்த திணறியதை அறிந்தார்.

    இ பீட் செயலியை அனைத்து வகையான போலீசார் முழுமையாக கற்கும் வண்ணம் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு அறிவுறுத்தினார்.

    பின்னர் ஏ.டி.ஜி.பி. சங்கர் கூறியதாவது:-

    வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்துவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடந்த கஞ்சா வேட்டைகளின் போது திரட்டப்பட்ட தகவலின் அடிப்படையில் சப்ளையர்களை கண்டறிந்து அவர்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.

    காவல்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அனைத்து போலீசாரும், அதிகாரிகளும் அறிந்து இருக்க வேண்டும்.

    இதன் மூலம் மேலும் சிறப்பாக பணி செய்ய முடியும். இதற்காக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

    வேலூர் மாநகரில் அதிகப்படியான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களிலும் அதிகப்படியான வாகன தணிக்கை இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரோந்து போலீசார் சிறப்பாக பணியை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×