என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "and its Maha Kumbabhishek ceremony"

    • 18 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, தாலுகா வயலூர் கிராமத்தில் முனீஸ்வரன், பூவாடை காரியம்மன், சப்த கன்னிமார்கள், ஆகிய கோவில்கள் புதியதாக கட்டப்பட்டு, பஞ்சவர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, 5யாக குண்டங்கள் அமைத்து.கடந்த 9ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி ஓமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, லட்சுமி பூஜை, ஆகிய மூன்று கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் சிறப்பு யாகங்கள் செய்தனர். நேற்று காலை மேளதாளத்துடன் புனித நீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள முனீஸ்வரன், சிலை மீது புனித நீரை அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர தீப ஆராதனை காண்பித்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×