search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anaicut accident"

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே நிகழ்ந்த விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு அருகே உள்ள கெங்கை நல்லூரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இலவம்பாடியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    இலவம்பாடி அருகே சென்ற போது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் பலத்த காயமடைந்தார்.

    பொது மக்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சீனிவாசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×