என் மலர்
நீங்கள் தேடியது "An unidentified vehicle collided with the bike."
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த வெளுகம்பட்டு, கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், (வயது25). திருவண்ணாமலையில் தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார்.
பிரகாஷ் கடந்த 3-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் வெளுகம்பட்டில், இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். மேல்வில்லிவலம், கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக்கில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ், பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சேத்துப்பட்டு, அரசு மருத்துவமனை முதல்உதவிசிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரகாஷ், சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபாக இறந்தார்.
இது குறித்து பிரகாஷின் தந்தை, சேத்துப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயகுமார், வழக்கு பதிவு செய்து. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.






