என் மலர்
நீங்கள் தேடியது "Amruth Project Drinking Water"
- மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் குடிநீர் தொட்டி, குழாய்கள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்த ப்பட்டுள்ளன. காட்பாடி காந்தி நகர், கழிஞ்சூர் பகுதிகளில் அம்ரூத் திட்டத்தில் குடிநீர் தொட்டி குழாய் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இன்று காலை வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அந்த பகுதியில் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
காட்பாடியில் அம்ரூத் திட்டத்தின் குழாய்கள் மற்றும் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
இந்த பணிகள் குறித்து சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான அளவில் குடிநீர் கிடைக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது என்றார்.
கமிஷனர் ஆய்வின்போது உதவி கமிஷனர் செந்தில்குமரன் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனிருந்தனர்.






